நாம் கெஞ்சுவதும், அழுது கேட்பதும்
வல்லோன் அவனிடத்தே !
வல்லோன் அவனிடத்தே !
நாம் தொழுவதும், மண்டி இடுவதும்
அந்த அர்ஷின் அதிபதிக்கே !
அந்த அர்ஷின் அதிபதிக்கே !
நாம் தேவைகளை கேட்டு பெறுவது
அந்த கருணை மிக்கவனிடமே !
அந்த கருணை மிக்கவனிடமே !
நாம் கேட்காமல் அள்ளி தருவதும்
அந்த தூயோன் ரஹுமானே !
அந்த தூயோன் ரஹுமானே !
நம் வணக்கமும் , நீயத்தும் அவனுக்கே
கூலிகள் தருவதில் ஆற்றல் மிக்கவனே !
கூலிகள் தருவதில் ஆற்றல் மிக்கவனே !
நாம் பசித்திருந்து , விழித்திருந்து -ரமழான்
நோன்பு நோற்றோம் அவனுக்காக
நோன்பு நோற்றோம் அவனுக்காக
பண்மடங்கு கூலிகளை வாரி வழங்குவான்
அடியான் உறுதியாக நமக்கே !
அடியான் உறுதியாக நமக்கே !
கொடிய பாவங்களுக்கு துவா கேட்போம்
மன்னிப்பதில் அவன் இறுதியானவன் !
மன்னிப்பதில் அவன் இறுதியானவன் !
நம் மரணத்தையும் , நம்மையும் அறிந்த
வலிமைமிக்கவன் அவன் ஒருவனே !
வலிமைமிக்கவன் அவன் ஒருவனே !
நாளை தீர்ப்பு நாளில் நமது கணக்குகளை
நேர் செய்வதும் அந்த கருணையாளனே !
நேர் செய்வதும் அந்த கருணையாளனே !
நம்மை உலகில் படைத்து, பரிபாளித்தவன்
அந்த ஆற்றல் மிக்கவனே !
அந்த ஆற்றல் மிக்கவனே !
நாம் ஈமானில் உறுதியோடு ,இறுதிவரை
அவனிடமே அஞ்சுவோம் ! அடிபணிவோம் !!
அவனிடமே அஞ்சுவோம் ! அடிபணிவோம் !!
கவிஞர்.கவிநேசன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்