என் தந்தை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday 23 June 2019

என் தந்தை !

மனைவி கருவுற்ற போது அவர்
கண்டது மகிழ்ச்சியின் உச்சம்
என் வளர்ச்சி பரிமாணம் அவரில்
வாரிசு தைரியத்தை தந்தது
மண்ணில் பிறந்த நான் அவருக்கு 
தந்தை அந்தஸ்தை கொடுத்தேன் 
என் கை பிடித்து அன்று என்னுடன் 
அவரும் நடை பழகினார்

என் சுட்டி சேட்டைகளை இன்னும்
ரசிப்பதில் எத்தனை பெருமை
இன்னும் அறிவுக்கு முதல் எழுத்தை
அறிமுகம் செய்து வைத்தவர்

அவர் தோள்களுக்கு நான் என்றும்
சுமை அல்ல ! சுகம்தான் !!
தளராத அவரின் உழைப்பு அன்று
என் எதிர்காலம் எண்ணி மட்டுமே
அவர் கற்று தந்தது மந்திரம் அல்ல
வாழ்கையின் பாதைகளை காட்டி

அப்பா என்றால் அன்பு என்பது
நான் அவரிடம் கண்ட உண்மை
எனக்காக மட்டுமே கனத்தது
மனது சிகரம் தொட வேண்டி
இன்று
வளைந்த தேகமும் !
வளையாத பாசமும் !!
என் அப்பா !
எனக்கு ஒரு பிதா மகன் !

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்