சுதந்திரதினம் !
வெள்ளையனிடம் மண்டி இட்டு
வேர்வையை சிந்திய காலம்
கொள்ளையாய் அடிமையாக
அன்று கூனி குறுகிய நேரம்
போராட்டம் , சிறைகள் இது
அனுபவித்த துயர சம்பவம்
உண்மை பேசினால் வன்மை
ஏன் ? என்று கேட்டால் அடிமை
சொந்த மண்ணில் கூட அன்று
நிமிர்ந்து நடக்க முடியவில்லை
தியாகிகள் பலர் ஏற்று கொண்டு
கடந்த வந்த துன்பங்கள் கோடி
சுதந்திர வேட்கை ஒன்றே மூலதனம்
சிந்தியது மணித்துளியாய் உதிரம்
வெள்ளையனை மண்ணை விட்டு
இறுதியாய் ஒரு நாள் விரட்டபட்டு
தேச தந்தைகளால் வீறு கொண்டு
அடியோடு முழுமை பெற்ற
இந்த சுதந்திரத்தை பேணி காத்து
நினைவு கொள்ளும் இத்தருணம்
பிளவு வேண்டாம் ஜாதி கொண்டு
ஒற்றுமையோடு உயர்வோம் நின்று
தலை வணக்குவோம் நம் தேசத்திற்கு
மரியாதை செய்வோம் தியாகிகளுக்கு
கவிஞர்: இறைநேசன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்