இது ஒரு காதல் கதை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday 26 October 2019

இது ஒரு காதல் கதை !

ஓரு காதல் கதை !

மீண்டும் ஓரு காதல் கதை
இது மனங்களை கடந்து

காதல் மீண்டு வருமா
இந்த மோகத்தில் இருந்து

காதலுக்கு கண்ணில்லை
இது கடந்த காலம்

காதலின் "பண-பலம்" இதை
ஆராய்வது நிகழ் காலம்

வளரத்த பெற்றோரை காதல்
ஒரு கணம் மறக்க சொல்லும்

காதலித்தவனை மட்டுமே
மனம் நினைக்க எண்ணும்

நல்லவனா , கெட்டவனா
அறிய அவசியமில்லை

காதலி முடிவெடுப்பாள்
இவன்தான் உலகமே என

காதல் மயக்கம் இவளை
நம்ப வைக்கும் நின்று

வாழ்க்கை தலை விதி
இனி வாழனும் நிமிர்ந்து

இழந்த பின் எதுவுமே
திரும்பாது உன்னிடம்

வாழ்க்கையில் வசந்தம்
வருவது ஒரு முறை

வாழ்க்கை வாழ்ந்து பார்
இந்த காதல் இல்லாது ....

சுகமாய் கடந்து
சுபமாய் முடியும் !

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்