அம்மா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday 26 October 2019

அம்மா !

அம்மா !

அன்பு இங்கே உதயமானது
தொப்புள் கொடி உறவாய்

பாசங்களை பிரித்தரியாத
நேசம் கொண்ட மனம்

இருப்பதை பகிர்ந்து தந்து
சந்தோஷத்தை ரசித்தவள்

ஈரைந்து மாத இன்னல்கள்
அவளுக்கு சுமையல்ல சுகம்

மரண வலியை தாண்டி ஒரு
உயிர் அவளுள் பிறந்தது

அம்மா மடி மீது வருடல்கள்
எனக்கு ஒரு வசந்தகாலம்

அம்மா தான் எனக்கு அகரம்
இன்று நான் சிகரம் தொட

அம்மா !
என் அன்பை சுமந்த உள்ளம்
உறுதியாக ! இறுதி வரை !!

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்