துணைவி !
நம் வாழ்க்கை துணைவி
இறைவனின் பொருத்தம்
நாம் விரும்பி மண முடித்தது
நம்மை தேடி வந்து அமைந்தது
இரண்டுமே நம்மால் முடிந்ததா
ஏற்கனவே முடிவு செய்யபட்டது
இன்னாருக்கு இன்னார்தான்
மாற்ற முடியாத விதி
திருமணம் என்ற பந்தத்தில்
ஜோடியாக இணைந்து
வாழ்க்கை என்ற பாடங்கள்
கற்று கொள்ள வந்த பந்தம்
பெற்றவர்கள் , உற்றவர்களை
பிரிந்து உன் கரம் பிடித்தவள்
வாழ்க்கையில் எல்லாமே
நீ ! தான் என்று உறவாகி
இன்பம் , துன்பங்களை
இருவருமே பங்கெடுத்து
விட்டு கொடுத்தல் ஒன்றே
இனி சுமூகமான பயணம்
கருத்து வேறுபாடு கடந்து
இணைந்து கரம் பிடித்து
வாரிசுகளை சுமந்து இனி
வாழ்வை வளமாக்கி
இன்னாரின் துணைவி என்ற
அடக்கத்துடன் ஆனந்தமாய்
கணவன் இறுதி நாள் வரை
மிகவும் உறுதியாக
வாழ்க்கையில் அவனுடன்
ஓரு நல்ல "துணைவி"யாக
கவிஞர்: இறைநேசன்.
Saturday 26 October 2019
About கவிஞர் இறைநேசன்
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்